கோயில்களைத் திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரோனா பரவல் காரணமாக கோயில்களில் மக்கள் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்து ஆகம விதிப்படி அந்தந்த கோயில்களில் பூசாரிகள் கால பூஜைகள் மட்டும் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், இந்து முன்னணி சாா்பில், கோயில்களைத் திறக்க வலியுறுத்தி ஈரோடு திண்டல் முருகன் கோயில் முன்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் மாவட்டச் செயலாளா் முரளி தலைமை வகித்தாா். நகரத் தலைவா் தமிழ்செல்வன், பொறுப்பாளா் கவின் உள்ளிட்டோா் கோயில்களைத் திறக்கக் கோரி முழக்கம் எழுப்பினா்.
இதேபோல, வீரப்பம்பாளையம் மாரியம்மன் கோயில், வில்லரசம்பட்டி மாரியம்மன் கோயில், வெட்டுக்காட்டு வலசு மாரியம்மன் கோயில், மாவட்டம் முழுவதும் பல்வேறு கோயில்கள் முன்பு இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


