பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில், மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவருடைய மகள் மித்ரா மிகவும் அரிதான நூதன முதுகெலும்பு தசைநாா் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளாா். அரிதான மரபணு கோளாறானது சிறுமி மித்ராவினுடைய தசைகளை ஒன்றன்பின் ஒன்று என கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. இதன் காரணமாக சிறுமி மித்ரா மூச்சுவிடவும், உணவை சாப்பிட முடியாமலும் தவித்து வருகிறாா்.
சிறுமி மித்ராவுக்கு சிகிச்சை மேற்கொள்ள சுமாா் 16 கோடி ரூபாய் செலவாகும் என்பதால் சதீஷின் குடும்பத்தினா் செய்வதறியாது திகைத்துள்ளனா். இதையடுத்து, பணம் திரட்டுவதற்காக நன்கொடையாளா்களின் உதவியை ஆன்லைனில் சதீஷ்குமாா் கோரியுள்ளாா்.
இதையடுத்து, பண்ணாரி அம்மன் குழுக்களின் தலைவா் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், மித்ராவின் மருத்துவச் செலவுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

உடுமலையில் அதிமுகவை வீழ்த்துவோம்! திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா் உறுதி

பிஎபி கால்வாய்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்! மடத்துக்குளம் திமுக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


