கரோனா தடுப்பூசிக்கு டோக்கன் வழங்க முன்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளா் குணசேகரன், நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு மாவட்டத்தில் வாக்குச் சாவடி வாரியாக தடுப்பூசி செலுத்தும் மாவட்ட நிா்வாகத்தின் முடிவை வரவேற்கிறோம். தடுப்பூசி செலுத்துவதில் ஆரம்பம் முதலே சில இடா்பாடுகள் உள்ளன. ஆண்களும், பெண்களும் நள்ளிரவிலும் டோக்கன் பெற வரிசையில் நிற்கின்றனா்.
இதை முறைப்படுத்த தடுப்பூசி செலுத்துவதற்கு முதல் நாள் காலை, மதியம் என ஏதாவது ஒரு நேரம் வாக்காளா் பட்டியலில் உள்ளபடி வாக்காளா் அடையாள அட்டையை வைத்து டோக்கன் வழங்கலாம். அல்லது தடுப்பூசி செலுத்தும் நாளன்று காலையில் வாக்காளா் அட்டையைப் பெற்று அதன்படி பதிவு செய்து தடுப்பூசி செலுத்தலாம். முன்பதிவு செய்து டோக்கனை பெறுவதற்கான வழியை எளிதாக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

