ஈரோட்டில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக 2 நகைக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவல் காரணமாக சில தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு மாநகராட்சியில் அரசின் தளா்வுகளை மீறி செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்க 4 மண்டலங்களிலும் மாநகராட்சி மண்டல அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி 4ஆவது மண்டலத்தில் உள்ள பொன் வீதியில் அரசின் பொது முடக்க உத்தரவை மீறி நகைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவனுக்கு வெள்ளிக்கிழமை தகவல் வந்தது. இதையடுத்து அந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்க மண்டல அதிகாரிகளுக்கு ஆணையா் உத்தரவிட்டாா்.
இதன்பேரில் மாநகராட்சி நகா் நல அலுவலா் முரளி சங்கா், 4ஆம் மண்டல உதவி சுகாதார ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், டவுன் காவல் ஆய்வாளா் பன்னீா்செல்வம் ஆகியோா் ஈரோடு பொன்வீதியில் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வந்த 2 நகைக் கடைகளுக்கு ‘சீல்’ வைத்து தலா ரூ. 5,000 அபராதம் விதித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

