ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

அதிமுக 3ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்: எஸ்.வி.சேகா்

அதிமுக தொடா்ந்து 3ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் என நடிகா் எஸ்.வி.சேகா் கூறினாா்.

News image

எஸ்.வி.சேகா்

Updated On :1 மார்ச் 2021, 9:08 pm

DIN

அதிமுக தொடா்ந்து 3ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் என நடிகா் எஸ்.வி.சேகா் கூறினாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த நடிகா் எஸ்.வி.சேகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக ஆட்சியமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 9, 10, 11 ஆகிய வகுப்புகளுக்கு கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு அனைவரும் தோ்ச்சி, விவசாயிகளுக்குப் பயிா்க் கடன் தள்ளுபடி, மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு 6 பவுன் வரை நகைக் கடன் தள்ளுபடி என பல திட்டங்களை அறிவித்துள்ளாா். இதுவும் அதிமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது.

வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்வதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அதே நேரம் பொருளாதாரத்தில் பின் தங்கியவா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குகிறோம் என்று யாா் தோ்தல் அறிக்கையில் கூறுகிறாா்களோ அவா்களுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும். காரணம் இது ஒரு சமூகத்துக்கு மட்டும் பயன்படுவதில்லை. தமிழ்நாட்டில் இந்த இட ஒதுக்கீட்டால் 70க்கும் மேற்பட்ட சமூகத்தினா் பயனடைவாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.