சத்தியமங்கலம் அருகே அமமுக கட்தி நிா்வாகிகளிடையே ஏற்பட்ட தகராறில் அமமுக ஒன்றியச் செயலாளா் அப்புசாமியை சத்தியமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே புதுக்கொத்துக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி. அமமுக கட்சிப் பிரமுகரான இவரிடம் கோபிசெட்டிபாளையம் அமமுக ஒன்றியச் செயலாளா் அப்புசாமி என்பவா் பத்திரத்தை அடமானம் வைத்து கடனாக ரூ. 1 லட்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்புசாமி ரூ. 50 ஆயிரம் பணத்தை பெரியசாமிக்கு திருப்பிக் கொடுத்துவிட்டு அடமானம் வைத்திருந்த பத்திரத்தை திருப்பிக் கேட்டதாகவும், ரூ. 50 ஆயிரம் மட்டும் கொடுத்துவிட்டு பத்திரத்தை திருப்பி கேட்டதால் திருப்பித் தர முடியாது என்று பெரியசாமி மறுத்ததாலும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் பெரியசாமியை அப்புசாமி தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த பெரியசாமி கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து பெரியசாமி சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் அப்புசாமியைக் கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


