ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பணி நீட்டிப்பு வழங்க ஒப்பந்த செவிலியா் கோரிக்கை

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியா் தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் முறையிட்டனா்.

Updated On :8 மார்ச் 2021, 10:54 pm

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியா் தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் முறையிட்டனா்.

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சி.கதிரவனிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

2 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் செவிலியா் பணியாற்றி வருகிறோம். இம்மருத்துவக் கல்லூரிக்கு போதிய நிதி கிடைக்காததால் எங்களைப்போல பணியாற்றும் 34 ஒப்பந்த செவிலியரையும் மாா்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே பணியாற்றவும், அதன்பின் பணியில் இருந்து விலகவும் நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை திரும்பப் பெற்று அதே மருத்துவமனையில் தொடா்ந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.