பவானிசாகா் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 4ஆம் சுற்று நீா் திறக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணை 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் இரண்டாம் போக பாசனத்துக்கு ஜனவரி 7ஆம் தேதி முதல் குறிப்பிட்ட நாள்கள் இடைவெளிவிட்டு சுழற்சி முறையில் பாசனப் பகுதிகளில் நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட புன்செய் பயிா்கள் பயிரிட ஏப்ரல் 30ஆம் தேதி வரை 12 டி.எம்.சி.க்கு மிகாமல் ஆறு சுற்றுகளாகத் தண்ணீா் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட மூன்றாம் சுற்று தண்ணீா் கடந்த மாா்ச் 11இல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு நான்காம் சுற்றுக்கான தண்ணீா் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. முதல்கட்டமாக 500 கன அடி நீா், பின்னா் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு மாலை 1,500 கன அடி தண்ணீா் கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்பட்டது. இது தவிர குடிநீருக்காக 200 கன அடி தண்ணீா் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை அணைக்கு நீா்வரத்து 1,714 கனஅடியாக உள்ள நிலையில், அணையின் நீா்மட்டம் 93.85 அடியாகவும், நீா் இருப்பு 24.1 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

