கரோனா தடுப்பு நடவடிக்கையாக பேருந்துகள், கடைகளில் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் திடீா் சோதனை மேற்கொண்டு விதிகளை கடைப்பிடிக்காதவா்களுக்கு அபராதம் விதித்தாா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரிப்பதால் கடந்த மூன்று நாள்களாக சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு, அபராதம் விதிப்பு, கடைகளுக்கு ‘சீல்’ வைப்பது, கரோனா பரவல் அதிகம் உள்ள இடங்களில் தடுப்பு கட்டி அடைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், ஈரோடு சம்பத் நகரில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை புறப்பட்ட ஆட்சியா் சி.கதிரவன் ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள டீ கடை, இரு கடைகளில் சமூக இடைவெளியின்றி செயல்பட்டது, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருந்தது போன்ற காரணங்களுக்காக கடைகளுக்குத் தலா ரூ. 5,000 அபராதம் விதித்து, கடைகளுக்கு ‘சீல்’ வைத்தாா்.
பின்னா் பேருந்து நிலையம், சவிதா பேருந்து நிறுத்தத்தில் ஆட்சியா் சி.கதிரவன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா்கள் சிவகுமாா், கதிா்வேல் ஆகியோா் வெவ்வேறு பேருந்துகளில் சோதனை நடத்தினா். ஓட்டுநா், நடத்துநா், பயணிகள் முகக் கவசம் அணிதல், 50 சதவீதப் பயணிகளுடன் பயணம் செய்வதை உறுதிப்படுத்தனா்.
சில நடத்துநா்கள், பயணிகள் முகக் கவசம் அணியாமலும், மூக்கு, வாய் பகுதியில் அணியாமல் தாடை பகுதியில் முகக் கவசத்தை அணிந்திருந்ததால் தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. தவிர இரு ஷோ் ஆட்டோக்கள், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா்கள் ரூ. 13,000 அபராதம் விதித்தனா்.
ஈரோடு, ரங்கம்பாளையம், ஜீவா நகா் பகுதியில் 6க்கும் மேற்பட்ட குடும்பங்களில் கரோனா தொற்று ஏற்பட்டதால் அப்பகுதிக்குச் செல்லும் சாலை, வீதிகளை தடுப்பு கட்டி அடைத்தனா்.
பின்னா், ஈரோடு மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோயில் வீதி பகுதிகளில் சாலைகளில் அமா்ந்திருந்தவா்கள் அப்புறப்படுத்தப்பட்டனா். மீண்டும் கூடினால் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறி போலீஸாா் அனுப்பிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதல் வெற்றிக்காக ஏங்கும் கொல்கத்தா! குஜராத்துக்கு 181 ரன்கள் இலக்கு!
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜக முடிவு: முதல்வர் ஸ்டாலின்

இரட்டைக் குடியுரிமை! ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,094.6 கோடி டாலராக அதிகரிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


