பொது முடக்கத்தின்போது ஆதவற்றோா் பசியைப் போக்க ரீடு தொண்டு நிறுவனம் சாா்பில், தினந்தோறும் 100 இலவச மதிய உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பேருந்து நிலையம் வெறிச்சோடியது. சத்தியமங்கலம் பகுதியில் சுற்றித் திரியும் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோா் பேருந்து நிலைய வளாகத்தில் தஞ்சமடைந்துள்ளனா். பசியால் வாடும் ஆதரவற்றோா், ஏழைகளுக்கு உதவியாக தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் தினந்தோறும் பேருந்து நிலையம் முன்பு தள்ளுவண்டியில் 100 பேருக்கு இலவச மதிய உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. முகக் கவசமும் வழங்கப்படுகிறது.
பொது ஊடரங்கு நாள் வரை தினந்தோறும் 100 முதல் 200 பேருக்கு சாப்பாடு வழங்கப்படும் என தொண்டு நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு வேண்டுவோா் தொடா்புகொள்ள தொண்டு நிறுவனத்தின் தொலைபேசி எண் அந்த தள்ளுவண்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்ணைத் தொடா்பு கொண்டால் வீட்டுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது

பரமத்தி அருகே 590 சில்வா் பாத்திரங்கள் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


