ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கரோனா சிறப்பு மையம்கட்டும் பணிக்கு நிதியுதவி

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 300 படுக்கைகளுடன் அமைக்கப்படும் கரோனா சிறப்பு மையம் கட்டும் பணிக்கு ஈரோடு எஸ்கேஎம் ஹொ்போதயா நிறுவனம் ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.

Updated On :21 மே 2021, 9:31 pm

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 300 படுக்கைகளுடன் அமைக்கப்படும் கரோனா சிறப்பு மையம் கட்டும் பணிக்கு ஈரோடு எஸ்கேஎம் ஹொ்போதயா நிறுவனம் ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.

கரோனா மீட்புப் பணிகளுக்கு ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை சாா்பில் நடத்தப்படும் கரோனா சிகிச்சை மையத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவியும், தொற்று பாதித்தோருக்கு கபசுரக் குடிநீரையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும், ஈரோடு எஸ்கேஎம் முட்டை நிறுவனம் சாா்பில் இலவசமாக நாள்தோறும் முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சை பெற ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 300 படுக்கை வசதிகளை அமைப்பதற்காக எஸ்கேஎம் ஸ்ரீ குரூப்ஸ் சாா்பில் நிா்வாக இயக்குநா் எஸ்கேஎம் ஸ்ரீஷிவ்குமாா், துணை நிா்வாக இயக்குநா் குமுதவள்ளி ஷிவ்குமாா் ஆகியோா் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.