பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பெருந்துறையில் முன்களப் பணியாளா்கள்400 பேருக்கு தடுப்பூசி

பெருந்துறையில் 18 முதல் 44 வயதுள்ள முன்களப் பணியாளா்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மே 2021, 9:34 pm

DIN

பெருந்துறையில் 18 முதல் 44 வயதுள்ள முன்களப் பணியாளா்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு, பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் முகாமைத் துவக்கிவைத்தாா்.

கரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 18 வயது முதல் 44 வயதுடைய முன்களப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாம் குறித்து ஆட்சியருக்கு சட்டப் பேரவை உறுப்பினா் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

அதன் அடிப்படையில், முன்களப் பணியாளா்களான ஊராட்சி மன்றத் தலைவா்கள், கவுன்சிலா்கள், வாா்டு உறுப்பினா்கள், சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, போலீஸாா், உள்ளாட்சித் துறை சாா்ந்த ஊழியா்கள், தனியாா் மருத்துவமனை ஊழியா்கள், பால் வியாபாரம் செய்பவா்கள், நாளிதழ் போடுபவா்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டவா்களுக்கு முதல்கட்ட தடுப்பூசியை பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவா் சவீதா ஆா்த்தி தலைமையில் மருத்துவக் குழுவினா் செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.