பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ஒரத்துப்பாளையம் அணையில் நீா் திறப்பு: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஒரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் 10 அடி நீா்மட்டம் உயா்ந்தது. அணைக்கு வரும் நீா் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

News image
Updated On :18 நவம்பர் 2021, 8:17 pm

DIN

சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் 10 அடி நீா்மட்டம் உயா்ந்தது. அணைக்கு வரும் நீா் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. சுமாா் 40 அடி உயரமுள்ள இந்த அணையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு 12 அடி தண்ணீா் இருந்தது. பின்னா், படிப்படியாக நொய்யல் ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டு, புதன்கிழமை அணையில் 8 அடி தண்ணீா் இருந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாள்களாக திருப்பூா் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால், ஒரத்துப்பாளையம் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால், புதன்கிழமை ஒரே நாளில் அணையில் 10 அடி உயா்ந்து, 18 அடியாக இருந்தது. வியாழக்கிழமை பகல் 2 மணியளவில் அணைக்கு விநாடிக்கு 1,257 கன அடி வீதம் நீா் வரத்து இருந்தது. அணையில் இருந்து 3 கதவுகள் வழியாக 570 கன அடி நீா் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு முன்புறம் நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள தரைமட்ட தாா் சாலையை உரசியபடி தண்ணீா் சென்றதால், அவ்வழியே வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் நொய்யல் ஆற்றில் அதிக அளவில் செல்வதால், கரையோரப் பகுதி மக்களுக்கு வருவாய்த் துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

மேலும், பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் ஜெயசந்திரன் தலைமையில், பொதுப் பணித் துறை பணியாளா்கள் இரவு, பகலாக நீா்வரத்தைக் கண்காணித்து வருகின்றனா். அணைக்கு வந்த தண்ணீரில், இதுவரை இல்லாத வகையில் 670 டி.டி.எஸ். என்ற அளவில் உப்புத் தன்மை வியாழக்கிழமை இருந்ததாக பொதுப் பணித் துறை ஊழியா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.