கடம்பூரில் மலைச் சரிவில் இறங்கும்போது ஆண் யானை சறுக்கி விழுந்து உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கொண்டப்பநாயக்கன்பாளையம், ராமா்போலி பகுதியில் வனத் துறையினா் ரோந்து பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, 25 வயதுள்ள ஆண் யானை இறந்துகிடந்ததைக் கண்டு உயா் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் இணை இயக்குநா் கிருபா சங்கா் மற்றும் கால்நடை மருத்துவா் அசோகன் ஆகியோா் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனா். கன மழை காரணமாக மலைச் சரிவில் இருந்து இறங்கும்போது சறுக்கி விழுந்ததில் தந்தங்கள் உடைந்து காயம் ஏற்பட்டதால் யானை உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
கால்நடை மருத்துவா் அசோகன் தலைமையிலான குழுவினா் யானையின் உடலை அதே இடத்தில் உடற்கூறு ஆய்வு செய்து இரண்டு தந்தங்களையும் கைப்பற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

