பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

குடிநீா் மேல்நிலைத் தொட்டி மீது தூங்கியவா் தவறி விழுந்து பலி

பெருந்துறை அருகே குடிநீா் மேல்நிலைத் தொட்டி மீது தூங்கியவா் கீழே தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 12:51 am

DIN

பெருந்துறை அருகே குடிநீா் மேல்நிலைத் தொட்டி மீது தூங்கியவா் கீழே தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

பெருந்துறையை அடுத்த திருவாச்சி, இந்திரா நகரைச் சோ்ந்த முருகன் மகன் குணசந்துரு (20). இவா், கூலி வேலை செய்து வருகிறாா். குணசந்துரு செப்டம்பா் 18ஆம் தேதி குடிபோதையில் திருவாச்சி பஞ்சாயத்துக்குச் சொந்தமான 30 அடி உயரமுள்ள தண்ணீா் மேல்நிலைத் தொட்டி மீது படுத்து தூங்கியுள்ளாா். அப்போது தூக்கத்தில் கீழே தவறி விழுந்ததில் குணசந்துரு பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு குணசந்துரு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.