கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோடு: நிதி நிறுவனம் நடத்தி ரூ.4.73 கோடி மோசடி செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

நிதி நிறுவனம் நடத்தி ரூ.4.73 கோடி மோசடி செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image
ஈரோடு: நிதி நிறுவனம் நடத்தி ரூ.4.73 கோடி மோசடி செய்த செல்லமுத்து
Updated On :4 அக்டோபர் 2021, 12:51 pm

DIN

நிதி நிறுவனம் நடத்தி ரூ.4.73 கோடி மோசடி செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையம் சாலை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் வெ.செல்லமுத்து (50). இவரது மனைவி பராசக்தி, மேட்டூர் அணை பகுதியைச் சேர்ந்த குருசாமி, ஈரோடு ஷேக் தாவூத் வீதியைச் சேர்ந்த நரசிம்மலு, பெங்களூருவைச் சேர்ந்த கிரிஷ்குமார், ஈரோடு சக்தி நகரைச் சேர்ந்த ஞானவேல் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து அன்னை இன்போடெக் என்ற நிறுவனத்தை 2009ஆம் ஆண்டு ஆரம்பித்தனர்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 24 சதவீதம் வட்டி தருவதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்தனர். இதை நம்பி 118 முதலீட்டாளர்கள் ரூ.4 கோடியே 73 லட்சத்து 94 ஆயிரத்து 803ஐ முதலீடு செய்தனர். ஆனால், உறுதி அளித்தபடி பணத்தை திருப்பித் தரவில்லை. இதையடுத்து செல்லமுத்துவின் நிறுவனத்தில் முதலீடு செய்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசு என்பவர் அளித்தப் புகாரின் பேரில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப் பதிவு செய்து செல்லமுத்து உள்ளிட்ட 6 பேரையும் 2010-ஆம் ஆண்டு கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் செல்லமுத்து மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 கோடியே 75 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். வழக்கில் தொடர்புடைய மற்ற ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததையடுத்து அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.