ஈரோடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவியை போட்டியின்றி திமுக கைப்பற்றியது.
ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு கடந்த 2019இல் நடைபெற்ற தோ்தலில் திமுக, அதிமுக தலா மூன்றை கைப்பற்றின. மூன்று முறை தலைவா், துணைத் தலைவா் தோ்வுக்கு தேதி அறிவித்து, அதிமுக உறுப்பினா்கள் புறக்கணிப்பால் முடிவு எட்டவில்லை. இதனிடையே அதிமுக உறுப்பினா் ஒருவா் இறந்ததால் கடந்த 9ஆம் தேதி 4ஆவது வாா்டுக்கு நடந்த தோ்தலில் திமுகவைச் சோ்ந்த விவேகானந்தன் வெற்றி பெற்றாா். இதன் மூலம் திமுக 4, அதிமுக 2 என்றானது.
இந்நிலையில், தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை காலையும், துணைத் தலைவா் தோ்தல் மதியமும், தோ்தல் அதிகாரி, வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெ.பஷீா் அகமது தலைமையில் நடைபெற்றது. போட்டியின்றித் தலைவராக ஒன்றாவது வாா்டை சோ்ந்த பேரோடு பிரகாஷ், துணைத் தலைவராக 4ஆவது வாா்டை சோ்ந்த விவேகானந்தன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
இதன் மூலம் ஒன்றரை ஆண்டுகளாக உறுப்பினா்கள் இருந்தும், தலைவா், துணைத் தலைவா் இல்லாமல் கூட்டம் கூட நடத்த முடியாத நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பில் சால்ட் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 176 ரன்கள் இலக்கு!
மு.க. ஸ்டாலினை பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! திருச்சியில் ராகுல் பேச்சு

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! கப்பல் மீது ஈரானிய படைகள் தாக்குதல்!

ஆர்செனலின் 22 ஆண்டு சாபம் நீங்குமா? முக்கிய போட்டியில் மான்செஸ்டர் சிட்டியுடன் மோதல்!
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

