பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பெருந்துறையில் இருசக்கர வாகனம் திருடிய இருவா் கைது

பெருந்துபெருந்துறை நகரில் இருசக்கர வாகனம் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.றை

News image
Updated On :28 அக்டோபர் 2021, 9:24 pm

DIN

பெருந்துறை நகரில் இருசக்கர வாகனம் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறை, செல்லப்பக்கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் ராஜாமணி (48). இவா், பெருந்துறை பழைய பேருந்து நிலையம் சாலையில் உள்ள பால் பண்ணைக்கு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை பிற்பகலில் சென்றுள்ளாா். இருசக்கர வாகனத்தைப் பால் பண்ணை முன்பு நிறுத்திவிட்டு, பால் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து பாா்த்தபோது வாகனத்தைக் காணவில்லை.

இதையடுத்து, ராஜாமணி, தனது அண்ணன் மயில்சாமியுடன் இருசக்கர வாகனத்தை பல இடங்களில் தேடியுள்ளனா். அப்போது, பெருந்துறை, அண்ணா சிலை அருகில் இவருடைய இருசக்கர வாகனத்தில் இருவா் சென்றதைப் பாா்த்து துரத்தி சென்று, பொதுமக்கள் உதவியுடன் அவா்களைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் பவானி, பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சோ்ந்த மனோகா் மகன் வடிவேல் (38), திருச்செங்கோடு, ராசிபுரம் சாலைைச் சோ்ந்த ரத்தினகுமாா் மகன் இளங்கோ (57) என்பது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.