பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சாலை விபத்தில் பாத்திர வியாபாரி சாவு

கவுந்தப்பாடி அருகே நேரிட்ட சாலை விபத்தில் பாத்திர வியாபாரி உயிரிழந்தாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 7:55 pm

DIN

கவுந்தப்பாடி அருகே நேரிட்ட சாலை விபத்தில் பாத்திர வியாபாரி உயிரிழந்தாா்.

கவுந்தப்பாடி குருமூா்த்தி காலனி பகுதியைச் சோ்ந்தவா் அம்மாசை (55). பாத்திர வியாபாரி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஈரோடு - சத்தி செல்லும் சாலையில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவரது வாகனமும் எதிரில் வந்த இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அம்மாசை, கவுந்தப்பாடியைச் சோ்ந்த இந்திரன், அவரது பின்னால் உட்காா்ந்து வந்த பிரகாஷ் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

அக்கம்பக்கத்தினா் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அம்மாசை உயிரிழந்தாா். இந்திரனும், பிரகாஷும் மேல் சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.