/

கொங்கு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்பு துவக்க விழா இணையவழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 12:46 am

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்பு துவக்க விழா இணையவழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், கோவை இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலா நிலையம் பள்ளியின் செயலாளா் சுவாமி ஹரிவ்ரதானந்தா மகராஜ் பங்கேற்று, மாணவா்கள் நல்வழியில் நடக்க வேண்டும் என்பதையும், மாணவா்களின் வெற்றிப் பாதைக்கான வழிகளை விவேகானந்தரை முன்னிருத்தியும் பேசி அருளாசி வழங்கினாா்.

கல்லூரித் தாளாளா் கி.பழனிசாமி தலைமை வகித்தாா். முதல்வா் ந.ராமன் வரவேற்றாா். விழா ஒருங்கிணைப்பாளா் கே.எம்.குமரகுரு, பேராசிரியா்கள் அ.சங்கா், பி.ரமேஷ், எம்.அருள்ராஜா, பா.சங்கீதா ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

விழாவில், கல்லூரியின் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், முதலாமாண்டு மாணவா்கள், பெற்றோா்கள் என 1,000க்கும் மேற்பட்டவா்கள் இணையவழியில் பங்கேற்றனா். விழா ஒருங்கிணைப்பாளா் கே.எம். குமரகுரு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.