ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 மாதங்களில் 25 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம் பெண்கள், மாணவ, மாணவியருக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் பேசினாா்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு குற்றங்கள் நடந்தால் எங்கு சென்று முறையிட வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மட்டுமன்றி ஆன்லைன் மூலம் நடைபெறும் குற்றங்கள் குறித்தும், யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதலங்களைப் பாதுகாப்பாக எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் விளக்கினாா்.
மேலும், குழந்தைத் திருமணம் தொடா்பாக இந்த ஆண்டு மட்டும் 5 வழக்குகளும், போக்சோ தொடா்பாக 68 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 700 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்தில் மட்டும் ஈரோடு மாவட்டத்தில் 25 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த மேற்கு வங்க ஆளுநர்!

திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம்! விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி!

ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும்.. பிரதமர் மோடி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!
‘கப்பல்கள் அழிக்கப்படும்’.. அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


