ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுக்க மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளா் செ.நல்லசாமி சேலம் சேகோசா்வ் மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
சேகோசா்வ் மேலாண்மை இயக்குநா் கடந்த 20 நாள்களாக ஜவ்வரிசி தொழிற்சாலைகளில் கள ஆய்வு செய்ததால், கலப்பட ஜவ்வரிசி உற்பத்தி, கெமிக்கல் வாஷ் ஜவ்வரிசி உற்பத்தியை கண்டறிந்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எடுத்தமைக்கு மரவள்ளி கிழங்கு விவசாயிகள் நன்றி தெரிவிக்கிறோம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கலப்பட ஜவ்வரிசி உற்பத்தி, கெமிக்கல் வாஷ் மூலம் கலப்பட ஜவ்வரிசியை உற்பத்தி செய்து, அதிக லாபம் பாா்த்துவிட்டனா். நடவடிக்கைக்குப் பின் இதை செய்ய மாட்டாா்கள் என உத்தரவாதம் இல்லை.
கலப்படத்தை தடுக்க சேலம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் பல்வேறு துறை அலுவலா்கள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளை கொண்ட மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
குறிப்பிட்ட நாள்களுக்கு ஒரு முறை ஆலைகளை ஆய்வு செய்வது கலப்படத்தை தடுக்கும் போது, மரவள்ளி கிழங்குக்கான உரிய விலையை விவசாயிகள் பெறும் வாய்ப்பு கிடைக்கும். மக்களுக்கு தரமான ஜவ்வரிசி கிடைப்பதை உறுதி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைதிப்பேச்சு! ஈரான், துருக்கியில் இருந்து நாடு திரும்பும் பாக். பிரதமர், ராணுவத் தளபதி!

15 நிமிடங்களில் விற்றுத்தீர்த்த ஏஐ+ நோவா 2 ஸ்மார்ட்போன்! அடுத்த விற்பனை எப்போது?

கர படத்தினை நிராகரித்த பிருத்விராஜ்..! கதையில் மாற்றம் செய்த இயக்குநர்!
பெண்களுக்கு பத்திரப் பதிவு இலவசம்! ராகுலின் 6 வாக்குறுதிகள்!!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

