/

உள்ளாட்சித் தோ்தல்: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த குறைகள், புகாா்களைத் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :18 செப்டம்பர் 2021, 12:33 am

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த குறைகள், புகாா்களைத் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 2019ஆம் ஆண்டு நிரப்பப்பட்ட பதவி இடங்களில் இறப்பு, பதவி விலகல் காரணங்களால் ஜூன் 30ஆம் தேதி வரையில் ஏற்பட்ட 27 காலிப் பதவிகளை நிரப்புவதற்காக தற்செயல் தோ்தல்கள் 11 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், இரண்டு ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 4 ஊராட்சித் தலைவா்கள், 20 ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தல் அக்டோபா் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்தலுக்கான கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியா் அலுவலக மூன்றாம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இத்தோ்தல் குறித்த குறைகள், புகாா்களை 0424-2266766 என்ற தொலைபேசி எண்ணில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் (வளா்ச்சி) தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.