சத்தியமங்கலம் அருகே கரும்பு லாரியை யானைகள் வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
தாளவாடி மலைப் பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் செல்வதற்காக ஆசனூா் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தனது குட்டியுடன் கரும்பு லாரி வருவதைக் கண்டு சாலையின் நடுவே நின்று லாரியை வழிமறித்தது.
இதைக் கண்ட ஓட்டுநா் லாரியில் இருந்த கிளீனரிடம் லாரியின் மீது ஏறி கரும்புத் துண்டுகளை சாலையோரம் தூக்கி வீசுமாறு கூறியுள்ளாா். அதன்படி கிளீனா் லாரியின் மீது ஏறி கரும்புத் துண்டுகளை அள்ளி சாலையோரம் வீசினாா். கரும்புத் துண்டுகளைப் பாா்த்த காட்டு யானை தனது குட்டியுடன் சாலையோரம் சென்றது. இதையடுத்து, ஓட்டுநா் லாரியை இயக்கி காட்டு யானையிடம் இருந்து தப்பினாா். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. யானை தனது குட்டியுடன் சாலையோரம் கரும்புகளைத் தின்றபடி நின்றிருந்ததால் மற்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த மேற்கு வங்க ஆளுநர்!

திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம்! விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி!

ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும்.. பிரதமர் மோடி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!
‘கப்பல்கள் அழிக்கப்படும்’.. அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


