திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களில் கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன் கோயில், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களின்

News image
Updated On :2 ஏப்ரல் 2022, 1:42 pm

DIN

ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன் கோயில், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களின் குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த மார்ச் 15-ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 

Story image

மார்ச் 19 ஆம் தேதி கம்பம் நடப்பட்டு 15 நாட்களாக மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி மாரியம்மனை வழிபாடு செய்து வந்தனர். 

Story image

இன்று அதன் முக்கிய நிகழ்வான கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா மாலை 3 மணிக்கு பெரிய மாரியம்மன் கோயிலில் முதலில் கம்பம் பிடுங்கப்பட்டு பன்னீர்செல்வம் பூங்கா சாலை வழியாக மணிக்கூண்டு சென்றடைந்தது. 

Story image

அதனைத் தொடர்ந்து சின்ன மாரியம்மன் கோயில் மற்றும் காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களிலும் கம்பம் பிடுங்கப்பட்டு மணிக்கூண்டு பகுதியில் மூன்று கம்பங்களும் ஒன்று சேர்ந்து ஈரோடு மாநகரின் முக்கிய சாலைகளின் வழியாக காரைவாய்க்கால் சென்றடைந்தது. 

Story image

வழி நெடுக சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்திற்கு நீர் ஊற்றியும், உப்பு மிளகு வீசியும் வழிபட்டனர். பின்னர் மூன்று கம்பங்களும் காரைவாய்க்காலில் விடப்பட்டது. 

Story image

மாநகரின் அனைத்து பகுதிகளும் கம்பம் பிடுங்கப்பட்டதில் இருந்து வாய்க்காலில் விடும் வரை குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் முதல் கொண்டு மஞ்சள் நீர் ஊற்றியும், மஞ்சள் பூசியும், மஞ்சள் நீர் விளையாட்டு விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினார். நாளை மறுதினம் காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.