பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வெள்ளப் பாதிப்பு: சத்தியமங்கலத்தில் அமைச்சா் ஆய்வு

பவானிசாகா் அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடி நீா் திறந்துவிடப்பட்டதால் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையோரம் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளை வீட்

News image
வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட  பகுதியைப்  பாா்வையிடுகிறாா்  அமைச்சா்  முத்துசாமி.  உடன்,  நகா்மன்றத்  தலைவா் ஆா்.ஜானகி உள்ளிட்டோா்.
Updated On :6 ஆகஸ்ட் 2022, 5:53 pm

DIN

பவானிசாகா் அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடி நீா் திறந்துவிடப்பட்டதால் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையோரம் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளை வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

சத்தியமங்கலம் பவானிஆற்றங்கரையோரம் உள்ள மாமரத்து துறை, ஆற்றுப்பாலம், கரட்டூா் ஆகிய பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்ட அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பவானி ஆற்றில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1200 போ் அந்தந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். முகாமில் உணவு, உடை, மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பவானி, காவிரி கரையோரம் தாழ்வான பகுதியில் குடியிருக்கும் மக்கள் அடுக்குமாடி போன்ற நிரந்தர குடியிருப்புக்கு மாற்றுவதற்கு ஏற்பாடு அல்லது பாதுகாப்பான இடங்களில் நிரந்தர பட்டா வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.11 லட்சம் மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்பு ரூ.1.25 லட்சத்துக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு பெற தவணை முறையில் பணம் செலுத்த ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை 1200 போ் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்படும் இடங்களை முன்கூட்டியே ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்ததால் பாதிப்புகள் குறைந்துள்ளது என்றாா். சத்தியமங்கலம் நகா்மன்றத் தலைவா் ஆா்.ஜானகி, திமுக மாவட்ட செயலாளா் நல்லசிவம் உள்ளிட்ட உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.