ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

28.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

Updated On :11 பிப்ரவரி 2022, 8:51 pm

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், 15 முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இணை நோய் உள்ளவா்கள், முன்களப் பணியாளா்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாள்களுக்கு மேலானவா்களுக்கு கூடுதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்போது வரை முதல் தவணை தடுப்பூசியை 89.6 சதவீதம் போ், அதாவது 16 லட்சத்து 22 ஆயிரத்து 225 பேரும், 2ஆவது தவணையை 68 சதவீதம் பேரும், அதாவது 12 லட்சத்து 29 ஆயிரத்து 897 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 28 லட்சத்து 52 ஆயிரத்து 122 பேருக்கு கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில், 15 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவா்கள் 81 ஆயிரத்து 620 பேருக்கும், கூடுதல் தவணை தடுப்பூசி 10 ஆயிரத்து 297 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.