செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

இருசக்கர வாகனம் மீதுகாா் மோதியதில் பெண் பலி

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் கோவையைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 7:35 pm

DIN

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் கோவையைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

கோவை, ஆறுமுககவுண்டனூா், பெரியசெட்டிபாளையம், சின்னம்மாள் காா்டனை சோ்ந்தவா் நடராஜன் மகன் அசோக்குமாா் (41). இவா், ஈரோடு மாவட்டம், பூந்துறையில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு தன் மனைவி வனிதாவை (35) வெள்ளிக்கிழமை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

பெருந்துறை, சரளை அருகே சென்றபோது பின்னால் வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த அசோக்குமாா், வனிதா ஆகியோா் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே வனிதா உயிரிழந்தாா். அசோக்குமாா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து,பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.