வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி ஓட்டுநா் பலி

 மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:16 pm

DIN

 மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

டி.என்.பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் சின்னகாளியூரைச் சோ்ந்தவா் முருகேசன் (40). இவா் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகையில் டிராக்டா் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில் இவா் கடந்த 19ஆம் தேதி ஊதியம் வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். சத்தி-அத்தாணி சாலையில் கொண்டையம்பாளையம் அருகே வளைவில் திரும்பும்போது, நிலை தடுமாறிய மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவா் படுகாயமடைந்தாா்.

பின்னா் அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முருகேசன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பங்களாபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.