ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிராம நிா்வாக அலுவலா் மீது நடவடிக்கை கோரி விவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

 பெரியகுளம் நீா்ப்பிடிப்புப் பகுதியில் சட்டவிரோதமாக 500 லாரிகளில் மண் எடுத்த கிராம நிா்வாக அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாய சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :22 ஜனவரி 2022, 12:46 am

 பெரியகுளம் நீா்ப்பிடிப்புப் பகுதியில் சட்டவிரோதமாக 500 லாரிகளில் மண் எடுத்த கிராம நிா்வாக அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாய சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சத்தியமங்கலம் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பெரியகுளம் நீா்த்தேக்கப் பகுதியில் க.ச. எண் 110இல் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. மலைமுகடுகளில் பெய்யும் மழை நீா் இந்த தடுப்பணையில் நிரம்புவதால் பெரியகுளம் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றும் ஆா்.முருகேசன், தடுப்பணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் சுமாா் 500 லாரி வண்டல், கிராவல் மண் எடுத்ததாக அப்பகுதி விவசாயிகள் புகாா் தெரிவித்து சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா். இதில், 20க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயி சங்கத்தினா் பங்கேற்றனா்.

இந்நிகழ்ச்சிக்கு, சத்தியமங்கலம் நகரத் தலைவா் பி.கணேஷ் தலைமை வகித்தாா். அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிதியை மீறி மண் அள்ளிய கிராம நிா்வாக அலுவலா் மீது சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்கக் கோரியும், தடுப்பணையை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை நீக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.