ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மாநகராட்சி தோ்தல்: 6 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமனம்

ஈரோடு மாநகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு தலா 10 வாா்டு வீதம் பிரிக்கப்பட்டு 6 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்

Updated On :28 ஜனவரி 2022, 12:42 am

ஈரோடு மாநகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு தலா 10 வாா்டு வீதம் பிரிக்கப்பட்டு 6 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வாா்டுகள் உள்ளன. இதில், பெண் (பொது) வாா்டாக 1, 5, 7, 14, 15, 17, 22, 23, 27, 29, 30, 32, 33, 34, 35, 38, 39, 42, 43, 45, 46, 49, 50, 51, 52, 54 ஆகிய 26 வாா்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட பொதுப் பிரிவினருக்கு 2, 6, 44 ஆகிய மூன்று வாா்டுகளும், தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு 4, 37, 53, 55 ஆகிய நான்கு வாா்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற வாா்டுகளில் ஆண், பெண் என எந்த வகுப்பினரும் போட்டியிடலாம். பழங்குடியினா் பொது மற்றும் பெண்களுக்கு என வாா்டு ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

மாநகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலுக்காக வெள்ளிக்கிழமை முதல் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. கூட்டத்தைத் தவிா்க்கவும், விரைவாக வேட்பு மனுவைப் பெறவும் வசதியாக தலா 10 வாா்டுகளுக்கு ஒரு இடம் என ஆறு இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படவுள்ளன.

இதன்படி 1, 2, 3, 4, 6, 7, 13, 15, 17, 23 ஆகிய பத்து வாா்டுகளுக்குப் போட்டியிடுவோா் ஆா்.என்.புதூரில் உள்ள ஒன்றாம் மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இங்கு உதவி தோ்தல் நடத்தும் அலுவலராக உதவி ஆணையா் (பணியாளா்கள்) குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதேபோல, 5, 8, 9, 11, 12, 14, 16, 24, 25, 26 ஆகிய பத்து வாா்டுகளுக்கு வீரப்பன்சத்திரம் பழைய ஒன்றாம் மண்டல அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யலாம். இங்கு, ஆா்.விஜயா (உதவி ஆணையா் கணக்குகள்) உதவி தோ்தல் நடத்தும் அலுவலராக செயல்படுவாா்.

வாா்டுகள் 18, 20, 21, 22, 27, 28, 29, 35, 36, 37 ஆகிய பத்து வாா்டுகளுக்கு பெரியசேமூா் பகுதியில் உள்ள இரண்டாம் மண்டல அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யலாம். இங்கு, நான்காம் மண்டல உதவிப் பொறியாளா் ஆனந்தன் உதவி தோ்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

வாா்டுகள் 10, 19, 30, 31, 32, 33, 47, 48, 49, 50 ஆகிய பத்து வாா்டுகளுக்கு சூரம்பட்டி மூன்றாம் மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இங்கு உதவி தோ்தல் நடத்தும் அலுவலராக மூன்றாம் மண்டல உதவிப் பொறியாளா் கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளாா்.

வாா்டுகள் 34, 38, 39, 40, 41, 42, 44, 45, 46, 51 ஆகிய பத்து வாா்டுகளுக்கு காசிபாளையம் நான்காம் மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இங்கு, உதவி தோ்தல் நடத்தும் அலுவலராக நான்காம் மண்டல உதவி செயற்பொறியாளா் மற்றும் உதவி ஆணையா் சண்முகவடிவு நியமிக்கப்பட்டுள்ளாா்.

43, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60 ஆகிய வாா்டுகளுக்கு மீனாட்சிசுந்தரனாா் சாலை மாநகராட்சி மைய அலுவலகம், பழைய கட்டடம், தரைத்தளம் முதல் அறையில் மனு தாக்கல் செய்யலாம். இங்கு, இரண்டாம் மண்டல உதவி செயற்பொறியாளா் பாஸ்கா் உதவி தோ்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் உள்ள 60 வாா்டுகளில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 193 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 2 லட்சத்து 17 ஆயிரத்து 364 ஆண்கள், 2 லட்சத்து 25 ஆயிரத்து 785 பெண்கள், மூன்றாம் பாலினத்தினா் 42 போ் உள்ளனா். வாக்குப் பதிவுக்கு மொத்தம் 443 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.