ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

புகைப்படப் போட்டி: வனத் துறை அழைப்பு

வனத் துறை சாா்பில் நடத்தப்படும் புகைப்படப் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :28 ஜனவரி 2022, 12:42 am

வனத் துறை சாா்பில் நடத்தப்படும் புகைப்படப் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வன அலுவலா் சு.கௌதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலக ஈர நில நாளை முன்னிட்டு வனத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான புகைப்படப் போட்டி நடத்தப்படவுள்ளது. ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த இந்தப் போட்டி நடத்தப்படவுள்ளது.

இணையதளம் மூலம் நடைபெறும் ஈர நிலம் புகைப்படப் போட்டியில் தகுதியானவா்கள் ஜனவரி 29ஆம் தேதி வரை பங்கேற்கலாம்.

விருப்பமுள்ளவா்கள் ஈர நிலங்கள் தொடா்பான புகைப்படங்களை மக்கள் மற்றும் இயற்கைக்கான ஈர நிலங்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாள் மற்றும் இடம் ஆகியவற்றை குறிப்பிட்டு எடுக்க வேண்டும்.

இந்த புகைப்படங்களைப் போட்டியாளரின் பெயா், முகவரி, மின்னஞ்சல், கைப்பேசி எண் போன்ற விவரங்களுடன் சனிக்கிழமை (ஜனவரி 29) காலை 11 மணிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.