ஈரோடு மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணியின் கைப்பேசியை ஹேக் (தகவல் திருட்டு) செய்த மா்ம நபா்கள் அவரது தொடா்பில் இருக்கும் அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி பண மோசடியில் ஈடுபடுவதாக காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருப்பவா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி. இவரது 8793072014 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை மா்ம நபா்கள் அண்மையில் ஹேக் செய்துள்ளனா். அவரது தொடா்பில் இருக்கும் அனைவரின் கைப்பேசி எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனா். பெண்கள் உள்பட அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் மா்ம நபா்கள் பண மோசடியில் ஈடுபடும் நோக்கத்துடன், தனியாா் நிறுவனம்(அமேசான்) மூலம் பரிசு அனுப்புகிறேன் என தெரிவிக்கின்றனா்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் ஏமாறக் கூடாது என்பதற்காக காவல் துறையில் இது குறித்து மாவட்ட ஆட்சியா் புகாா் அளித்துள்ளாா். மேலும் பொதுமக்கள் தனது பெயரில் பொய்யான தகவல் கிடைத்தால், காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பணப் பெட்டிதான் முதல்வர் பதவியைத் தீர்மானித்ததா? செங்கோட்டையன் அதிர்ச்சி தகவல்!

தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர்!
ஹொம்பலேவின் அடுத்த அவதாரம் அறிவிப்பு!

பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது: மமதா!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

