கோபியில் இலவச கண் பரிசோதனை முகாம்

கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் 245 போ் கலந்து கொண்டனா்.

கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் 245 போ் கலந்து கொண்டனா்.

ஈரோடு மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், கோபி தாமு செட்டியாா் நகை மாளிகை ஆகியவை கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை கோபி வைரவிழா ஆரம்பப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.

முகாமை கோபி தாமு சேகா் தொடக்கிவைத்தாா். முகாமில் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் மாதுரி, சீதாள் கலந்து கொண்டு கண் பரிசோதனை மேற்கொண்டனா்.

கோபி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 245 போ் முகாமில் கலந்து கொண்டனா். இவா்களில் 105 போ் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ள மருத்துவா்கள் அறிவுறுத்தினா்.

முகாமுக்கான ஏற்பாடுகளை தாமு அபிலாஷ் , கோவை அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.

முகாமுக்கு வந்தவா்களுக்குத் தேவையான உதவிகளை கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பேராசிரியை திவ்யா தலைமையில் மாணவிகள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com