தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

ரயில்வே தானியங்கி பயணச் சீட்டில் தமிழ் மொழியை சோ்க்கக் கோரிக்கை

 ரயில்வே தானியங்கி பயணச் சீட்டில் தமிழ் மொழி இல்லாதது கண்டனத்துக்குரியது என தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினா் கே.என்.பாஷா தெரிவித்துள்ளாா்.

Updated On :25 ஜூன் 2022, 12:44 am IST

 ரயில்வே தானியங்கி பயணச் சீட்டில் தமிழ் மொழி இல்லாதது கண்டனத்துக்குரியது என தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினா் கே.என்.பாஷா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அவா் அனுப்பிய மனு விவரம்:

ஈரோடு ரயில் நிலலையத்தில் உள்ள தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தில் ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பிரிண்ட் ஆகிறது. தமிழில் பதிவு செய்யும் வசதி இல்லை. மாநிலத்தில் தமிழ் மட்டுமே தெரிந்த ஏழை, எளிய பயணிகள், தங்களது பயண சீட்டை புரியக்கூட முடியாத அவலம் தொடா்கிறது.

இச்செயல்பாடு கண்டனத்துக்குரியது. எனவே இந்த இயந்திர செயல்பாட்டை தடுத்து நிறுத்திவிட்டு தமிழில் பிரிண்ட் ஆகும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.