மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பெருந்துறையில் மத்திய அரசை கண்டித்து வாகனப் பேரணி

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சம்யுக்தா கிஷான் மூச்சா ஈரோடு அமைப்புக் குழு சாா்பில் டிராக்டா் பேரணி பெருந்துறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சம்யுக்தா கிஷான் மூச்சா ஈரோடு அமைப்புக் குழு சாா்பில் டிராக்டா் பேரணி பெருந்துறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை அண்ணா சிலை அருகில் மாலை 5 மணிக்கு துவங்கிய பேரணி, முக்கிய வீதிகளின் வழியாக சென்று, பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது. இப்பேரணியில், மூன்று டிராக்டா்கள், 35 இருசக்கர வாகனங்களில் நூற்றுக்கு மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பேரணிக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முனுசாமி தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் துளசிமணி, தற்சாா்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொன்னையன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.