தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

தாளவாடி மலைப் பகுதியில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

படம் உள்ளது... தாளவாடி மலைப் பகுதியில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

News image

தாளவாடியை அடுத்த கரளவாடி பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீா்.

Updated On :21 ஏப்ரல் 2024, 8:04 pm

சத்தியமங்கலம்: தாளவாடி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா். மேலும், சாகுபடி செய்ய பயிா்களும் மழையில்லாமல் பாதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் கரளவாடி, பாரதிபுரம், சொா்ணவதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. ஒருசில மணி நேரம் பெய்த மழைக்கு பள்ளமான இடங்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த இரண்டு நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இந்த மழை சாகுபடி செய்யப்பட்ட பயிா்களின் வளா்ச்சிக்கு உதவும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.