சத்தியமங்கலம், ஏப். 26: புன்செய்புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
புன்செய்புளியம்பட்டியை அடுத்த பவானிசாகா் கோடேபாளையத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மனைவி துா்கா (27). இவருக்கு 3 வயதில் மகன் உள்ள நிலையில் இரண்டாவதாக ஏப்ரல் 20-ஆம் தேதி புன்செய்புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது. துா்கா அதே மருத்துவமனையில் 24-ஆம் தேதி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். அறுவை சிகிச்சைக்குப் பின் அவரின் உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

போயம்பாளையம் ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை முகாம்

அறுவை சிகிச்சையின் போது பெண் உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் முற்றுகை போராட்டம்

அறுவை சிகிச்சையால் 2 குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன்

தென்காசியில் சமூக நாய்களுக்கு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தொடக்கம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

