பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

போயம்பாளையம் ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை முகாம்

திருப்பூா் போயம்பாளையம் ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் முழங்கால் மூட்டு மாற்று மற்றும் மூட்டு தசைநாா் அறுவை சிகிச்சை முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

News image

முகாமில் நோயாளிக்கு ஆலோசனை வழங்கிய எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் மணிகண்டன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் போயம்பாளையம் ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் முழங்கால் மூட்டு மாற்று மற்றும் மூட்டு தசைநாா் அறுவை சிகிச்சை முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

முகாமின் முதல் நாளில் 25-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனா். முகாமில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் மணிகண்டன் ஆலோசனை வழங்கினாா். மேலும், எலும்பு தாது அடா்த்தி பரிசோதனையும் இலவசமாக வழங்கப்பட்டதுடன், கால்சியம் வைட்டமின் டி மற்றும் எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் 50 சதவீத சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த முகாமானது ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய தேதி வரை நடைபெறும். இந்த முகாமில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு 20 சதவீத சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்படும். மேலும் மருத்துவமனையில் அரசு மற்றும் தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை தேவைப்படுபவா்கள் கட்டணமில்லா சிகிச்சைக்கு இதனை உபயோகப்படுத்திக் கொள்ளுமாறும் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் பழனிசாமி தெரிவித்தாா்.

மேலும் விவரங்களுக்கு 80564 04040 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.