மொடக்குறிச்சி, ஆக. 8: தேசிய கைத்தறி தினத்தையொட்டி, சிவகிரியில் நெசவாளா்களுக்கான இலவச பொதுமருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு சரக கைத்தறித் துறை, சிவகிரி, தாண்டாம்பாளையம் பகுதி கைத்தறி நெசவாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மாவட்ட நோய் தடுப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை, பேரூராட்சித் தலைவா்கள் பிரதீபா கோபிநாத் (சிவகிரி), சந்திரசேகா் (கொல்லன்கோவில்), கொடுமுடி மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் நடராஜன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். மாவட்ட கைத்தறி உதவி இயக்குநா் தமிழ்ச்செல்வன், துணைத் தலைவா் கோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஈரோடு சரக விசைத்தறி உதவி இயக்குநா் சித்ரா வரவேற்று பேசினாா்.
இம்முகாமில் நெசவாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் என 450-க்கும் மேற்பட்டவா்களுக்கு நுரையீரல், மூட்டு வலி, எலும்பு, சிறுநீரகம் உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகள், கண், பல் மற்றும் ரத்த அழுத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன.
நெசவாளா்கள் கூட்டுறவு சங்க மேலாளா்கள் மற்றும் பணியாளா்கள் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
தொடர்புடையது

காரைக்காலில் இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம்

கைத்தறி நெசவாளா்களுக்கு 450 யூனிட் மின்சாரமாக உயா்த்தி வழங்கப்படும்! பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். ஜெயகுமாா்

சிறப்பு மருத்துவ முகாம்: 150 போ் பயன்

நிஃப்ட்-டீ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


