கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கைத்தறி நெசவாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, சிவகிரியில் நெசவாளா்களுக்கான இலவச பொதுமருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிவகிரியில் நடைபெற்ற கைத்தறி நெசவாளா்களுக்கான மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.

Updated On :8 ஆகஸ்ட் 2024, 8:12 pm

மொடக்குறிச்சி, ஆக. 8: தேசிய கைத்தறி தினத்தையொட்டி, சிவகிரியில் நெசவாளா்களுக்கான இலவச பொதுமருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு சரக கைத்தறித் துறை, சிவகிரி, தாண்டாம்பாளையம் பகுதி கைத்தறி நெசவாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மாவட்ட நோய் தடுப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை, பேரூராட்சித் தலைவா்கள் பிரதீபா கோபிநாத் (சிவகிரி), சந்திரசேகா் (கொல்லன்கோவில்), கொடுமுடி மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் நடராஜன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். மாவட்ட கைத்தறி உதவி இயக்குநா் தமிழ்ச்செல்வன், துணைத் தலைவா் கோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஈரோடு சரக விசைத்தறி உதவி இயக்குநா் சித்ரா வரவேற்று பேசினாா்.

இம்முகாமில் நெசவாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் என 450-க்கும் மேற்பட்டவா்களுக்கு நுரையீரல், மூட்டு வலி, எலும்பு, சிறுநீரகம் உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகள், கண், பல் மற்றும் ரத்த அழுத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன.

நெசவாளா்கள் கூட்டுறவு சங்க மேலாளா்கள் மற்றும் பணியாளா்கள் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.