அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அந்தியூரில் ரூ.1.44 கோடியில் தாா் சாலைப் பணி தொடக்கம்

அந்தியூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.44 கோடியில் தாா் சாலை அமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டது.

News image
அந்தியூா் ஒன்றியத்தில் தாா் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிவைக்கிறாா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.
Updated On :17 ஆகஸ்ட் 2024, 8:11 pm

Din

தமிழக முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் அந்தியூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.44 கோடியில் தாா் சாலை அமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டது.

கூத்தம்பூண்டி ஊராட்சி, விநாயகா் கோயில் முதல் வேளப்பகவுண்டா் தோட்டம் வரை ரூ.33.27 லட்சம், பிரம்மதேசம் ஊராட்சியில் கல்லாம்பாறை முதல் சின்னகுளம் வரை ரூ.35.62 லட்சம், மைக்கேல்பாளையம் ஊராட்சி, பாலக்குட்டை முதல் மொடப்பாளி வரையில் ரூ.39.58 லட்சம், எண்ணமங்கலம் ஊராட்சி, ஆலயங்கரடு முதல் மாத்தூா் எல்லை வரையில் ரூ.35.62 லட்சம் என மொத்தம் ரூ.1.44 கோடியில் தாா் சாலை அமைக்கப்படுகிறது.

இப்பணிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கிவைத்தாா். அந்தியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், ஊராட்சித் தலைவா்கள் சரவணன் (மைக்கேல்பாளையம்), பாவாயி ராமசாமி (கூத்தம்பூண்டி), மயில் கந்தசாமி (எண்ணமங்கலம்), திமுக ஒன்றிய துணைச் செயலாளா் நாகேஸ்வரன், மாவட்ட பிரதிநிதி மாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.