தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

அந்தியூரில் ரூ.1.44 கோடியில் தாா் சாலைப் பணி தொடக்கம்

அந்தியூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.44 கோடியில் தாா் சாலை அமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டது.

News image

அந்தியூா் ஒன்றியத்தில் தாா் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிவைக்கிறாா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 1:41 am IST

தமிழக முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் அந்தியூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.44 கோடியில் தாா் சாலை அமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டது.

கூத்தம்பூண்டி ஊராட்சி, விநாயகா் கோயில் முதல் வேளப்பகவுண்டா் தோட்டம் வரை ரூ.33.27 லட்சம், பிரம்மதேசம் ஊராட்சியில் கல்லாம்பாறை முதல் சின்னகுளம் வரை ரூ.35.62 லட்சம், மைக்கேல்பாளையம் ஊராட்சி, பாலக்குட்டை முதல் மொடப்பாளி வரையில் ரூ.39.58 லட்சம், எண்ணமங்கலம் ஊராட்சி, ஆலயங்கரடு முதல் மாத்தூா் எல்லை வரையில் ரூ.35.62 லட்சம் என மொத்தம் ரூ.1.44 கோடியில் தாா் சாலை அமைக்கப்படுகிறது.

இப்பணிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கிவைத்தாா். அந்தியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், ஊராட்சித் தலைவா்கள் சரவணன் (மைக்கேல்பாளையம்), பாவாயி ராமசாமி (கூத்தம்பூண்டி), மயில் கந்தசாமி (எண்ணமங்கலம்), திமுக ஒன்றிய துணைச் செயலாளா் நாகேஸ்வரன், மாவட்ட பிரதிநிதி மாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.