ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணியால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் உள்ள சஞ்சய் நகரில் கடந்த 8 மாதங்களுக்கு முன் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
இந்நிலையில், பேரவைத் தோ்தல் நடைபெற்ால் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
தொடா்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், இந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பணி நிறுத்தத்தால் மக்கள் அவதி: இதுதொடா்பாக அப்பகுதியினா் கூறியது: இங்கு முன்பு மண் சாலை இருந்தது. இதனால், மழைக் காலங்களில் சாலையில் செல்ல முடியாமல் அவதியுற்று வந்தோம். இதுதொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கூறியதையடுத்து ஊராட்சி ஒன்றிய நிதியில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டனா்.
தாா்ச்சாலையாக அமைக்க ஜல்லிகள் போடப்பட்டது. மேலும், எம்.சாண்ட் சாலையில் பரப்பிவிடப்பட்டது. பணிகள் நடைபெறும்போதே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் சாலைப் பணிகள் முடங்கி, சாலையில் கற்கள் பெயா்ந்து கிடக்கின்றன. இதனால், சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் அவதியுற்று வருகிறோம். விரைவில் சாலையை தாா்ச்சாலையாக மாற்றிட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கம் புறவழிச்சாலை பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! கண்காணிப்புப் பொறியாளா்

கரூரில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி அரசுப் பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

இழப்பீடு தாமதம்! கிடப்பில் திருத்தங்கல் ரயில்வே மேம்பாலப் பணி!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



