ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் போராட்டத்தால் பணிகள் பாதிப்பு

ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் போராட்டத்தால் வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 6:33 pm

Din

ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் போராட்டத்தால் வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளா் பணியிடங்கள் உள்பட அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்பட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும்.

100 நாள் வேலைத் திட்டத்தில் கணினி உதவியாளா்கள், திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அனைவரையும் பணி வரன்முறைப்படுத்த வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்துக்கு தனி ஊழியா் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். கலைஞா் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்கள் ஏற்படுத்தி நிரப்ப வேண்டும்.

ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் மீது திணிக்கப்படும் பிற துறை பணிகளை முற்றிலும் கைவிட வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சி செயலாளா் முதல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வரையிலான ஊரக வளா்ச்சித் துறைப் பணியாளா்கள் 641 போ் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலகம், ஊராட்சி அலுவலகம், ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம் ஆகியவை வெறிச்சோடிக் காணப்பட்டன. எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட்23) இரண்டாம் நாளாக போராட்டம் நடைபெற உள்ளது.