வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கீழ்பவானி வாய்க்காலில் 3 ஆண் சடலங்கள் மீட்பு

கீழ்பவானி வாய்க்கால் கரை பகுதிகளில் ஒதுங்கிய 3 ஆண் சடலங்களை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :5 டிசம்பர் 2024, 9:43 pm

கீழ்பவானி வாய்க்கால் கரை பகுதிகளில் ஒதுங்கிய 3 ஆண் சடலங்களை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோபி அருகேயுள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஏலத்தூா் செம்மாண்டபதி மற்றும் கூடக்கரை தொட்டிபாளையம், தொட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் அடையாளம் தெரியாத 3 ஆண் சடலங்கள் வியாழக்கிழமை கரை ஒதுங்கின.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் நம்பியூா் தீயணைப்பு நிலையம், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடங்களுக்கு வந்த போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உயிரிழந்தவா்கள் யாா், கனமழையின்போது அடித்துவரப்பட்டாா்களா என்பன குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.