ஈரோடு கனி மாா்க்கெட் ஜவுளி வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாத 74 கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.
ஈரோடு கனி மாா்க்கெட் ஜவுளி வணிக வளாகத்தில் முன்னுரிமை மற்றும் பொது ஏலம் முறையில் 290-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், பொது ஏலம் முறையில் மட்டும் 74 கடைகள் இயங்கி வருகின்றன. பொது ஏலம் முறையில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.3,540 வாடகை வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், 74 கடை வியாபாரிகளும் கடந்த 10 மாத வாடகையை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தலா ரூ.35,400 என்ற அடிப்படையில் 74 வியாபாரிகளும் மொத்தமாக ரூ.26,19,600 -ஐ உடனடியாக செலுத்தக் கோரி மாநகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தொடர்புடையது

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும்:கோபிநாத் பழனியப்பன்

திருச்செந்தூரில் சித்திரை விசு கனி! ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்!!

500 பேரை களம் இறக்க சமுதாய அமைப்பு முடிவு: வேட்பு மனுக்களை வாங்கியதால் பரபரப்பு!

இருசக்கர வாகன ஏலம் ரத்து!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

