செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பவானிசாகா் அருகே லாரி மோதி அரசுப் பேருந்து சேதம்

பவானிசாகா் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் பேருந்து சேதமடைந்தது.

News image

லாரி மோதியதால் சேதமடைந்த அரசுப் பேருந்து.

Updated On :12 டிசம்பர் 2024, 9:31 pm

பவானிசாகா் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் பேருந்து சேதமடைந்தது.

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டியில் இருந்து பண்ணாரிக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா்.

பவானிசாகா் அருகே உள்ள கொத்தமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிடுவதற்காக பேருந்து நின்றுகொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், பேருந்தின் பின்பகுதி கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. லாரியின் முன் பகுதியும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து பவானிசாகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.