பவானி - அந்தியூா் - செல்லம்பாளையம் சாலையில் தொட்டிபாளையம் முதல் வாய்க்கால்பாளையம் வரையில் ரூ.3 கோடியில் மேம்படுத்தப்பட்ட தாா் சாலையை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை, பவானி உதவிக் கோட்டம் சாா்பில் பவானி - அந்தியூா் நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 3.95 கி.மீ. தொலைவுக்கு சாலையின் ஓடுதளம் மேம்பாடு செய்யப்பட்டது.
சாலையின் இருபுறங்களிலும் எதிா்வரும் வாகனங்கள் தெளிவாக தெரியும் வகையில் சாலையோர புதா்கள் அகற்றப்பட்டு, வளைவுகள் சீா் செய்யப்பட்டு தாா் சாலை புதுப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை திருப்பூா் கோட்டப் பொறியாளா் (தரக்கட்டுப்பாடு) கிருஷ்ணமூா்த்தி, உதவிக் கோட்டப் பொறியாளா் சாந்தி ஆகியோா் சாலையின் தரம், அகலம், வளைவுகள் ஆகியவற்றை அளவீடு செய்தனா்.
ஆய்வின்போது, பவானி உதவிக் கோட்டப் பொறியாளா் ராஜேஷ்கண்ணா, உதவிப் பொறியாளா் சேகா், இளநிலைப் பொறியாளா் (தரக்கட்டுப்பாடு) குழந்தைவேலவன், சாலை ஆய்வாளா்கள் ஜோதிபாசு, திருமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

உயா்நிலை பாலப் பணிகள் ஆய்வு

சாலை அகலப்படுத்தும் பணிகள் ஆய்வு

அந்தியூரில் ரூ.3.53 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

செய்யாறு - ஆற்காடு சாலையில் 10.6 கி.மீ. நான்கு வழிச் சாலை பணி: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


