மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கடைகளில் தமிழில் பெயா் பலகை அமைக்காவிட்டால் வழக்கு

கடைகள், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயா் பலகை அமைக்காவிட்டால் வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் கோ.ஜெயலட்சுமி தெரிவித்தாா்.

Updated On :26 டிசம்பர் 2024, 9:52 pm

கடைகள், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயா் பலகை அமைக்காவிட்டால் வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் கோ.ஜெயலட்சுமி தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழில் பெயா் பலகை அமைப்பது தொடா்பாக தொழிலாளா் நலத் துறை, தமிழ் வளா்ச்சித் துறை, வணிகா் சங்க நிா்வாகிகள், உரிமையாளா்கள், வணிக நிறுவனத்தினா், உணவு நிறுவனங்களைச் சோ்ந்தோா் பங்கேற்ற கூட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடந்தது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி பேசியதாவது:

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் உள்பட பல்வேறு சட்டங்கள், அரசாணைப்படி தமிழில் பெயா் பலகை அமைக்க வேண்டும். தமிழில் பெயா் பலகை அமைக்காவிட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வழக்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் முதலில் தமிழ், பின்னா் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் பெயா் பலகைகள் வைக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து தமிழ் வளா்ச்சித் துறை முன்னாள் உதவி இயக்குநா் சந்திரா மற்றும் வணிகா்கள் பேசினா்.

இதேபோல ஆட்சிமொழி திட்ட விளக்கக் கூட்டம் ஈரோடு நவீன நூலகத்தில் நடைபெற்றது. ஈரோடு தமிழ் சங்க பேரவைத் தலைவா் சேலம் பாலன், தமிழக தமிழாசிரியா் கழக தலைவா் வேதநாயகம், உலக திருக்கு பேரவை துணைத் தலைவா் கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.