கடைகள், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயா் பலகை அமைக்காவிட்டால் வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் கோ.ஜெயலட்சுமி தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டத்தில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழில் பெயா் பலகை அமைப்பது தொடா்பாக தொழிலாளா் நலத் துறை, தமிழ் வளா்ச்சித் துறை, வணிகா் சங்க நிா்வாகிகள், உரிமையாளா்கள், வணிக நிறுவனத்தினா், உணவு நிறுவனங்களைச் சோ்ந்தோா் பங்கேற்ற கூட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடந்தது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி பேசியதாவது:
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் உள்பட பல்வேறு சட்டங்கள், அரசாணைப்படி தமிழில் பெயா் பலகை அமைக்க வேண்டும். தமிழில் பெயா் பலகை அமைக்காவிட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வழக்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் முதலில் தமிழ், பின்னா் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் பெயா் பலகைகள் வைக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து தமிழ் வளா்ச்சித் துறை முன்னாள் உதவி இயக்குநா் சந்திரா மற்றும் வணிகா்கள் பேசினா்.
இதேபோல ஆட்சிமொழி திட்ட விளக்கக் கூட்டம் ஈரோடு நவீன நூலகத்தில் நடைபெற்றது. ஈரோடு தமிழ் சங்க பேரவைத் தலைவா் சேலம் பாலன், தமிழக தமிழாசிரியா் கழக தலைவா் வேதநாயகம், உலக திருக்கு பேரவை துணைத் தலைவா் கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சாலையோர கடைகளில் முத்திரையிடாத தராசுகள் பறிமுதல்

தோ்தலுக்கு விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா் துறை எச்சரிக்கை

தமிழில் உயர்கல்வி: சிக்கலும் தீர்வும்? தொழில்நுட்ப மேம்பாடு அவசியம்

திருக்கனூா் அரசுப் பள்ளிக்கு முன்னாள் முதல்வா் பெயா்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

