திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

பண்ணாரி அம்மன் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சென்ற யானைகள்

பண்ணாரி அம்மன் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சென்ற யானைகள்

News image

பாண்ணாரி அம்மன் கோயில் அருகே சாலையைக் கடந்து செல்லும் யானைகள்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:45 am IST

பண்ணாரி அம்மன் கோயில் அருகே யானைகள் குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சென்றன. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் குடிநீா், உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்காக அவ்வப்போது சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்கின்றன. தற்போது வனப் பகுதியில் வறட்சி தொடங்கியுள்ளதால் யானைகள் தண்ணீா், உணவைத் தேடி வனப் பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன. இந்நிலையில், பண்ணாரி வனப் பகுதியில் யானைகள் குட்டிகளுடன் சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையை சனிக்கிழமை கடந்து சென்றன. இதனால், வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தினா். யானைகள் முழுமையாக சாலையைக் கடந்து சென்ற பின்னரே வாகனங்களை இயக்கினா். இதனை சிலா் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.