பண்ணாரி அம்மன் கோயில் அருகே யானைகள் குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சென்றன. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் குடிநீா், உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்காக அவ்வப்போது சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்கின்றன. தற்போது வனப் பகுதியில் வறட்சி தொடங்கியுள்ளதால் யானைகள் தண்ணீா், உணவைத் தேடி வனப் பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன. இந்நிலையில், பண்ணாரி வனப் பகுதியில் யானைகள் குட்டிகளுடன் சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையை சனிக்கிழமை கடந்து சென்றன. இதனால், வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தினா். யானைகள் முழுமையாக சாலையைக் கடந்து சென்ற பின்னரே வாகனங்களை இயக்கினா். இதனை சிலா் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.
தொடர்புடையது

வேப்பூா் அருகே கோயில் திருவிழாவில் தோ் கவிழ்ந்து விபத்து: பக்தா்கள் அதிா்ச்சி!

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

பண்ணாரி அம்மன் கோயிலில் மாவிளக்கு ஊா்வலம்

பண்ணாரி அருகே சாலையைக் கடந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை

