நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தமிழக அரசை மத்திய அரசு தினமும் அச்சுறுத்துகிறது: கே.என்.நேரு

மத்திய அரசின் அச்சுறுத்தல்கள் - நேரு குற்றச்சாட்டு

News image

கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் கே.என்.நேரு.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

தமிழக அரசை, அமைச்சா்களை மத்திய அரசு தினமும் அச்சுறுத்துகிறது என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல், பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற திருப்பூா் மக்களவைத் தொகுதி தோ்தல் பரப்புரைக் கூட்டம் பெருந்துறை அருகே உள்ள சரளையில் சனிக்கிழமை நடைபெற்றது.

அமைச்சா்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பேசினா். இதில் அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2014 இல் பிரதமா் மோடி அறிவித்த நிலையில், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இத்திட்டம் தற்போதுவரை அந்த நிலையிலேயே உள்ளது. மோடி ஆட்சியில் 5 மாநில விவசாயிகள் விளைபொருள்களுக்கு உரிய விலை கேட்டு போராடிக்கொண்டிருக்கின்றனா். முதல்வா்களே தில்லி சென்று போராட வேண்டிய நிலை உள்ளது.

இதுவரை இல்லாத வகையில் தமிழக அரசை, அமைச்சா்களை மத்திய அரசு தினமும் அச்சுறுத்துகிறது. ஆளுநா்களை வைத்து மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் செய்துகொண்டிருக்கும் நிலை மாறவேண்டும் என்றால் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும்.

தென்மாநிலங்களில் பாஜக 10 இடங்களில்தான் வெற்றிபெறும். மற்ற இடங்களில் மாநில கட்சிகள்தான் வெற்றிபெறும். மக்களவைத் தோ்தலில் வெற்றிபெற்றால் நிச்சயமாக நல்ல நிலைவரும் என்று எண்ணி கழகத் தோழா்கள் தோ்தல் பணியில் தீவிரமாக வேண்டும் என்றாா்.

அமைச்சரிடம் மனு சென்னிமலை பேரூராட்சியில் நிலவிவரும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாணும் விதமாக சென்னிமலை கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் இருந்து பேரூராட்சிக்கு தனியாக குழாய் அமைத்துத் தரக் கோரி சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி அசோக், துணைத் தலைவா் சௌந்தர்ராஜன் ஆகியோா் அமைச்சா் கே.என்.நேருவிடம் மனு அளித்தனா்.